Sowdambiga

ஆடி அமாவாசை சிறப்பு

தேவலரிடம் உள்ள நூலை பறிக்க வந்த அசுரர்களை அழித்து தேவலரைக் காத்திட்ட ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னை தேவலரை நோக்கி கூறினாள்.

மகனே! உன் பகை நீங்கியது. புனிதமான நூல் காப்பற்றப்பட்டது. விரும்பும் இடத்திற்குச் செல்க. எப்பொழுது நீ என்னை நினைத்தாலும் உன் முன் இருப்பேன். இன்று ஆடி அமாவாசை. இவ்வமாவாசை இரவில் நீ என்னை நினைத்தாய். உனக்காக நானும் அவதரித்தேன். இவ்வவதாரம் தேவாங்கர்க்குச் சொந்தமான அவதாரம். எனவே இவ்வாடி அமாவாசை எனக்குப் பிறந்தநாள். இதே நாளில் நீயும் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டாய். எனவே உனக்கும் இது பிறந்த நாள்.

தேவாங்க குலத்தோர் அமாவாசை நாளில் வேறு காரியங்கள் செய்யாமல் என்னைத் தியானித்தால் சீரும் சிறப்பும், வலிமையும், செல்வமும், புகழும், பெருமையும், ஆயுளும், ஆரோக்கியமும் மற்றும் அணைத்து மங்கலங்களும் பெற்று வாழ்வர் என்று தேவாங்க மகரிஷிக்கு வரம் தந்து மறைந்தாள் ஸ்ரீ சௌடேஸ்வரி.

எனவே தான் பெரியவர்கள் அமாவாசையை விடுமுறைத் தினமாகக் கொண்டு அன்று அன்னையை நினைத்து வாழ்ந்தனர். நாம் அன்னையின் அருளைப்பெற கடும் தவத்தையோ, துறவு மேற்கொள்வதையோ வேறு கடுமையான விரதங்களையோ அவள் நமக்கு விதிக்கவில்லை. என்னை நினையுங்கள் வருகின்றேன் என்ற அந்தக் கருணையை நினைந்து நினைந்து உருக வேண்டாமா.

தேவாங்க குல தவகல்கள்



 © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.